இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

Friday, March 14, 2014

உலக வரலாற்றில் காணாமல் போன, விபத்துக்குள்ளான விமானங்கள்



உபாலி முதல் மலேசியன் ஏர்லைன் வரை.. விறுவிறுப்பான ஒரு ஆய்வு.
சமீப நாட்கள் இருந்து உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து எல்லோரின் பிரார்த்தனைகளிலும் இடம்பிடித்த ஒரு விடயம் என்றால் அது, மலேசியன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று காணாமல் போன விடயம்தான். உலகின் ஒருசாரார் இந்த விமானம் கடத்தப்பட்டு விட்டது என்றும் இன்னுமொரு சாரார் இந்த விமானம் விபத்துக்குள்ளாகி விட்டது என்றும் வாதிட்டுகொண்டிருக்கும் இந்த வேளையில் உண்மை என்னவென்று கண்டறிய பலநாட்டு இராணுவ வீரர்களும் மீட்புக்குழுக்களும் களத்தில் இறங்கி தேடிக்கொண்டிருக்கின்றனர்.

விமானம் உருவாக்கப்பட்டு அது சேவையில் விடப்பட்ட நாளிலிருந்து இன்றுவரையும் எத்தனையோ ஆயிரம் விமான விபத்துக்கள் இந்த உலகில் நடந்திருக்கின்றன அவைகளைப்பற்றி அந்தந்த நேரங்களில் மட்டும் நாம் பேசிவிட்டு மறந்து விடுகிறோம்.அவ்வாறே இப்போது காணாமல் போயிருக்கும் விமானத்தையும் கொஞ்சநாள்வரை பரபரப்பாக பேசிக்கொண்டிருந்துவிட்டு மறந்துவிடும்வோம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

வீதி விபத்துகளைவிட விமான விபத்துக்கள் மிகவும் கொடூரமானவை காரணம், வீதியில் விபத்து ஏற்பட்டால் சடலமாவது கிடைக்கும் ஆனால் விமானவிபத்து ஏற்படும்போது மிகவும் அரிதாகவே உடல் எச்சங்களும் மீட்கப்படுகின்றன. வீதி விபத்துக்களைபோன்று விமான விபத்துக்கள் அடிக்கடி ஏற்படாவிட்டாலும் எப்போதாவது இருந்து அந்த விபத்துக்கள் ஏற்படும்போது அதிகமான உயிரிழப்புகளும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுவிடுகின்றன.

வரலாற்றில் அதிகமான விமான விபத்துக்கள் உலகப்போர் நடைபெற்ற காலங்களிலேயே இடம்பெற்றுள்ளது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதல் விமான விபத்து 1925ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்றுள்ளது USS Shenandoah, என்ற விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 14 பயணிகளும் கொல்லப்பட்டனர். இதுவே உலகின் மிக மோசமான விமான விபத்தாக பதிவாகியுள்ளதுடன் அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக பல விபத்துகள் இடம்பெற்றுள்ளன. ஆரம்பகாலத்தில் விமான விபத்துக்கள் அதிசயமான ஒன்றாகவே பார்க்கப்பட்டது பின் வந்த காலங்களில் அவை பழக்கப்பட அதுவே எல்லோருக்கும் பழகிப்போயும் விட்டது.

விமானங்களை நாம் இரண்டு வகையாக பிரிக்க முடியும் முதலாவது வகை போர் விமானங்கள் மற்றவகை வர்த்தக நோக்கத்தில் பயன்படுத்தப்படும் பயணிகள் விமானங்கள் இங்கு நாம் பேசப்போவது பயணிகள் விமானங்கள் பற்றியே. ஏனெனில் இந்த மாதிரியான விமானங்களின் விபத்தில்தான் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றது.

பொதுவாக விமானங்கள் மேலே ஏறும்போதும், கீழே இறங்கும்போதும்தான் அதிகமான விபத்துக்களை சந்திக்க நேரிடுகின்றது அதனை தவிர மேலே விமானங்கள் பறக்கின்ற போது ஏற்படுகின்ற விபத்துக்கள் மிக அரிதாகவே இடம்பெறுகின்றது. அதிலும் விமானம் காணாமல் போதல் என்கின்ற ஒரு விடயம் அதிசயமான ஒன்றாகவே நோக்கப்படுகின்றது. எப்படியான விமான விபத்துக்கள் ஏற்பட்டாலும் சில நாட்கள் கழித்து அதற்க்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விடுவது இயல்பானது. அதற்கு மாற்றமாக சில திட்டமிடப்பட்ட செயல்கள் மூலம் நடக்கின்ற விமான விபத்துகளின் காரணங்களை கண்டறிதல் என்பது அபூர்வமானது, இதற்கு சிறந்ததொரு உதாரணம் இலங்கையின் மிகப்பிரபலம் வாய்ந்த கோடிஸ்வரர் உபாலி அவர்களின் மறைவு விமான விபத்தில் கொல்லப்பட்ட உபாலி அவர்களின் உடல் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை அந்த விமான விபத்து நடந்து 31 வருடங்கள் நிறைவு பெறப்போகின்றன. உபாலி அவர்கள் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கொழும்பிற்கு வந்துகொண்டிருந்த சமயம் அந்த விபத்து இடம்பெற்றது.

அதே போன்று சுதந்திர வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களும் விமான விபத்தில் கொல்லப்பட்டிருந்தார். அவரின் உடலும் இதுவரையில் கிடைக்கவும் இல்லை அந்த விபத்திற்கான காரணம் கண்டறியப்படவும் இல்லை. இப்படியான விபத்துக்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவை என்கின்ற முடிவுக்குத்தான் ஒவ்வொருவரும் வரவேண்டியுள்ளது.

பயணிகள் விமானங்கள் விபத்துக்குள்ளாகும்போது அந்த விபத்திற்கான காரணிகள் காலம் தாழ்த்தியாவது கண்டுபிடிக்க படக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு.. பலவித பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த விமானங்கள் எப்படி விபத்துக்குள்ளாகின்றன என்பது எல்லோரின் இதயத்திலும் எழக்கூடிய சாதாரண ஒரு கேள்வியாக இருக்கின்றது.

விமானத்தில் ஏற்படுகின்ற தொழிநுட்ப கோளாறுகள்

விமானம் பறக்கும் போது பறவைகள் மோதுதால் - இவ்வாறான சம்பவங்கள் நடப்பது அரிது ஏனெனில் 36000 அடி உயரத்தில் எந்த பறவையும் பறக்காது. விமானம் கீழே இறங்க முயற்சிக்கும் போதுதான் பறவைகள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றது.

விமான ஓட்டியின் கவனக்குறைவு - பல சமயங்களில் Auto Mode இல் விமானத்தை பறக்க விட்டு விட்டு விமான ஓட்டிகள் உறங்கிவிடுகிறார்கள்.

அடுத்த முக்கியமான ஒரு காரணம் வானிலை மாற்றங்கள்.

மேலே சொல்லியவற்றில் மூன்று காரணங்களை கவனமான பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க முடியும்.ஆனால், கடைசியாக குறிப்பிடப்பட்டுள்ள காரணத்தை தவிர்ப்பது கடினம்.நான்காவது காரணத்தால் உண்டாகும் விபத்தினையும் குறைந்த பட்சமாக குறைக்கலாம். ஆனால் எரிபொருள் செலவு விமான நிறுவனங்களுக்கு அதிக அளவில் வரும். அதனால் எந்த விமான நிறுவனமும் அதற்கு முன்வராது அதிகமான லாபத்தை எதிர் பார்த்தே விமான நிறுவனங்கள் பயணிகளின் உயிரை பணயம் வைக்கின்றன.

வளிமண்டலம் பல அடுக்குகளால் ஆனது முதல் அடுக்கு ஸ்ட்ராட்டோ ஸ்பியர், அடுத்து ட்ராபோ ஸ்பியர், மீசோ ஸ்பியர், அயனோ ஸ்பியர் என உச்ச அடுக்காக கொண்டது. மேகமூட்டம், மழை, மேலும் பிற வானிலை மாற்றங்கள் துடிப்பாக நிகழும் அடுக்கு ஸ்ட்ராட்டோ ஸ்பியர்.இங்கு தான் காற்றின் அடர்த்தி, வேகம் எல்லாம் அதிகம். இந்த அடுக்கில் பறப்பது கரடு முரடான சாலையில் பயணம் செய்வது போன்றது .மேலும் பறப்பதற்கு அதிக எரிப்பொருளும் செலவாகும்.

இதற்கு அடுத்த அடுக்கான டிராபோஸ்பியரில் மேகம், மழை எல்லாம் இருக்காது ஆனால் அவ்வப்போது மின்னல் வெட்டும், பனி பொழிவும் இருக்கும், மேலும் குறைவான அடர்த்தியில் காற்று இருக்கும். இதனால் விமானத்தின் எடைத்தூக்கும் திறன் பாதிக்கப்படும். ஆனால்அடர்த்தி குறைவானக்காற்றில் பறந்தால் குறைவாக எரிப்பொருள் செலவாகும். காரணம் காற்றினால் உருவாகும் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் . எதிர்க்காற்றில் சைக்கிள் ஓட்டுவதற்கும் தள்ளு காற்றில் சைக்கிள் ஓட்டுவதற்கும் உள்ள வித்தியாசம் போல் அதாவது தள்ளு காற்றில் விமானத்தை ஓட்டினால் எரிபொருள் பெருமளவு மிச்சப்படும்.

மேலும் ஒரு வானியல் சிக்கலும் அங்கே இருக்கு அதுதான் பலவிமான விபத்திற்கு பெரும்பாலும் வழிவகுப்பது.. அப்படிப் பறப்பது கரணம்தப்பினால் மரணம் போன்றது ஆனாலும் சிக்கனமாக பறக்க வேண்டும் என்று திட்டமிடும் விமான நிறுவனங்கள் ஆபத்தினை தெரிந்தே டிராபோஸ்பியர் அடுக்கில் விமானங்களை இயக்குகின்றன. இதனாலே பல விபத்துக்கள் ஏற்பட்டு நாம் உயிர்களை இழக்க வேண்டியுள்ளது அதைப்பற்றி விமான நிறுவனங்களுக்கு கவலையில்லை அவர்களுக்கு இலாபம் கிடைத்தால் போதுமானது.

பரந்து விரிந்த ஆகாயத்தில் கண்டபடிக்கு விமானத்தை செலுத்த முடியாது. அதற்காகவே பாதைகள் வகுக்கப்பட்டுள்ளது அந்த பாதைகள் ஊடே விமானம் பயணிக்கின்றது 35000 அடிகளுக்கு மேலேதான் பயணிகள் விமானம் இயக்கப்படுகின்றது இங்கு ஆபத்துக்கள் அதிகம். திடீர் காற்றழுத்தம், வெற்றிடம் என்பவற்றால் விமானம் குலுங்கும் இதை விமானத்தில் பயணித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள. காற்றில்லாத வெற்றிடங்களில் விமானத்தின் எஞ்சின் அணைந்து போய் விடும் விமானியின் திறமையில் இருக்கிறது எஞ்சின் உயிர்பெறுவதும் அப்படியே முற்றாக அணைந்துபோய் விபத்து ஏற்படுவதும்.

http://ametia.files.wordpress.com/2014/03/missing-malaysia-airline-flight.gif 
அடுத்து இன்னுமொரு முக்கிய விடயம் அந்த விமானத்தில் கொண்டு செல்லப்படும் மொத்த நிறை அந்த விமான எடையின் மூன்றில் ஒரு பங்காக இருக்கவேண்டும் உதாரணமாக 450 தொன் எடையுள்ள ஒரு விமானத்தில் 150 தொன் எடையை மட்டுமே ஏற்ற வேண்டும் எஞ்சின் திறனுக்கு சமனாக எடை இருந்தால் அந்த விமானம் தாங்காது அதனால்தான் ஒரு குறிப்பிட்ட எடைக்கு மேலதிகமாக எடையை கொண்டு செல்ல யாரும் அனுமதிக்கபடுவதில்லை.

இப்படி முக்கியமான காரணங்களை நாம் கோடிட்டு காட்ட முடியும்.. அண்மைக்காலமான விமான விபத்துகளை நாம் கொஞ்சம் நோக்கலாம்..


2009 ஜூன் முதலாம் திகதியில் இருந்து இற்றைக்கு வரையான காலப்பகுதியில் உலகின் பல நாடுகளிலும் இருந்து மிக மோசமான 15 விமான விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றது அவைகளின் பட்டியல் இது.

2009 ஜூன் 1:

பாரிசிலிருந்து ரி யோடி ஜெனிரோவிற்கு பறந்துகொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானம் அட்லான்டிக்கடலில் விழுந்ததில் 228 பயணிகள் உயிரிழந்தனர்.

2009 ஜூன் 30:

கெமரோஸ் நாட்டின் கடல் பகுதியில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்ததில் 150 பேர் உயிரிழந்தனர்.

2009 ஜூலை 15:

ஈரானின் குவாஸ்வின் நகரில் நேரிட்ட விமான விபத்தில் 168 பேர் உயிரிழந்தனர்.

2010 ஜன 25:

லெபனானின் பெய்ரூட் அருகே எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளானதில் 90 பேர் உயிரிழந்தனர்.

2010 ஏப். 10:

ரஷ்யாவின் ஸ்மோலென்ஸ்க் நகரில் இடம்பெற்ற விமான விபத்தில் போலந்து அதிபர் லெக் காக்ஜியான்ஸ்கை உள்பட 97 பேர் பலியாகினர்.

2010 மே 12:

லிபியாவின் திரிபோலி நகரில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 103 பேர் உயிரிழந்தனர்.

2010 மே 22:

இந்தியாவின் மங்களூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 158 பேர் உயிரிழந்தனர்.

2010 ஜூலை 28:

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் புறநகர்ப் பகுதியில் விமானம் மலையில் மோதி 152 பேர் உயிரிழந்தனர்.

2011 ஜன. 10:

ஈரானின் யுரேமியா நகரில் நேரிட்ட விமான விபத்தில் 77 பேர் உயிரிழந்தனர்.

2011 ஜூலை 8:

கொங்கோவின் கிஷான் கனி நகரில் மோசமான வானிலை காரணமாக விமானம் தரையில் விழுந்து 74 பேர் உயிரிழந்தனர்.

2011 செப். 7:

ரஷ்யாவின் யாரோஸ்லாவல் நகரில் விமானம் விழுந்து நொறுங்கியதில் ஹாக்கி வீரர்கள் உள்பட 43 பேர் உயிரிழந்தனர்.

2012 ஏப்ரல் 20:

இஸ்லாமாபாத் அருகே நேரிட்ட விமான விபத்தில் 127 பேர் உயிரிழந்தனர்.

2012 மே 9:

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே ரஷ்யாவின் சுகோய் சூப்பர்ஜெட் விமானம் விழுந்து நொறுங்கியதில் 45 பேர் இறந்தனர்.

2012 ஜூன் 3:

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 153 பேர் கொல்லப்பட்டனர்.

2013 ஜூலை 6:

சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் தென் கொரியாவின் போயிங் 777 ரக விமானம் ஓடு பாதையில் இருந்து விலகி விபத்துக் குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 180 பேர் காய மடைந்தனர்.

இந்த விமான விபத்துக்கள் அனைத்தும் தரையில் நடந்தவை இதற்க்கான காரணங்கள் எல்லாம் தெளிவாகவே கண்டறியப்பட்டன. ஆனால் இப்போது தேடப்பட்டுக்கொண்டிருக்கும் MH370 என்கின்ற விமானத்தை போலவே 2009ம் ஆண்டு ஏர் பிரான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு விமானமும் பிரேசிலுக்கு சென்று கொண்டிருக்கும்போது காணாமல் போயிருந்தது. ஐந்து நாட்கள் தொடர்ச்சியான தேடுதல் வேட்டைக்கு பிறகு அந்த விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து மூழ்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 228 பயனிகளுள் 50 பேரின் உடல்கள் மட்டும்தான் கண்டுபிடிக்கப்பட்டன ஏனையவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை.

கடந்த 1937ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பெண் பைலட் அமெலியா இயர்ஹார்ட், துணை பைலட் நூன்னுடன் விமானத்தில் சென்றார். அட்லான்டிக் கடல் பகுதியில் ஹாவ்லாந்து தீவு பகுதியில் பறந்த விமானம் மாயமானது. இதுவரை அந்த விமானம் என்ன ஆனது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

கடந்த 1945ம் ஆண்டு 14 வீரர்களுடன் சென்ற 5 போர் விமானங்கள், மர்ம பிரதேசம் என்று புவியியல் வல்லுனர்களால் அழைக்கப்படும் பெர்முடா முக்கோண பகுதிக்கு மேலே பறந்த போது மாயமானது அந்த விமானமும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

1947ம் ஆண்டு இங்கிலாந்தின் ஸ்டார் டஸ்ட் ரக விமானம் 11 பேரோடு ஆண்டிஸ் மலை பகுதியில் பனிப்புயலில் சிக்கி மாயமானது 50 ஆண்டுகள் கழித்துதான் அது பனிப்புயலில் சிக்கியது உறுதி செய்யப்பட்டது.

1962ம் ஆண்டு 107 அமெரிக்க வீரர்களுடன் வியட்நாம் சென்ற விமானத்தின் கதியும் அதே கதிதான். அதை பற்றி ஒரு தகவல் கூட இன்னும் கிடைக்கவில்லை.

அந்த விமானத்தின் விபத்தை போன்று இப்போது காணாமல் போயிருக்கும் விமானமும் விபத்துக்குள்ளாகி இருக்கலாம். எது எப்படி விசாரணைகளும் தேடுதல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.நிச்சயம் ஒரு முடிவு கிடைக்கும். எல்லாம் அறிந்த ஒருவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறான்.


Thursday, February 20, 2014

ராஜீவ் காந்தி கொலை - நிரபராதிகள் விடுதலை - குற்றவாளிகள் இன்றைய இந்தியாவின் பெரும் புள்ளிகள்


" நிரபராதிகள் தூக்கிலிடப்பட கூடாது "
" குற்றவாளிகள் என சந்தேகப்படும் சில சாமிகள் வெளியில் இருக்க கூடாது "


ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை என்றே பெரும்பாலான தமிழ் மற்றும் வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

இதனை ஏற்றுகொள்ள மனம் மறுத்தாலும், சிலரின் தேவைக்காக சிறை வைக்கப்பட்டனர் என்பதே எனது கருத்து.
விடுதலை செய்யப்படவுள்ள இந்த எழு பேரில் அதிகம் பேசப்பட்டது, 
முருகன் - நளினியின் காதல். 

இவர்களது வாழ்கை வரலாற்றை எனது மேற்படிப்புக்காக இந்திய சென்றிருந்த போது நண்பன் ஒருவனின் புத்தகத்தை இரவல் வாங்கி படித்து அறிந்து கொண்டேன்.

நளினி கைது செய்யப்படும் போது கர்பிணியாக இருந்தாள். ஈவு இரக்கமின்றி ஒரு நிறை மாத கர்ப்பிணியை கொடுமை படுத்தியது பெண்ணை தெய்வமாக போற்றும் தமிழகம். உண்ணக் கூட உணவு வழங்காமல் பட்டினி போட்டனர். சிறையில் பெண் கைதிகள் பகுதியில் கடமையிலிருப்பவர்களும் பெண் அதிகாரிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

" ஒரு பெண்ணின் மனது ஒரு பெண்ணுக்கு தெரியும் "
"இளகிய மனம் கொண்டவர்கள் பெண்கள் "
இந்த செயலின் பின் எல்லாமே பொய்த்து போனது.


தன் மனைவியின் நிலையை அறிந்த முருகன் என்ன செய்வது என்று தெரியாமல் உண்ணா விரதத்தில் இருந்தே தன் மனைவிக்கான உணவினை பெற்றுக் கொடுத்தார். இல்லையெனில் இன்று நளினியும் இல்லை, அரித்திராவும் இல்லை. ஆம் முருகன் - நளினிக்கு பிறந்தவள் தான் அரித்ரா. குறித்த தேதிக்கு முன்னதாகவே நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் பலவீனமாக இருந்தார்கள்.

மாற்றுத் துணியோ, உணவோ எதுவுமே இல்லாமல் ஒவ்வொரு இரவிலும் நளினி அனுபவித்த அந்தத் துன்பம் என்னால் வந்தது என்று இப்போதும் நினைத்து நினைத்து அழுகிறேன் என்று முருகன் ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தார்.

சிறை அதிகாரி ஒருவர் நளினியின் நிலையைப் பார்த்து குழந்தைக்கு பால் பவுடர் வாங்கிக் கொடுத்தார். சிறைக்கு வந்த பேரறிவாளனின் அப்பா குயில்தாசன் குழந்தை அரித்ராவுக்கு கொசுவலை வாங்கிக் கொடுத்தார். கேட்க அது சாதாரணமாக இருக்கும். ஆனால், அது அப்போது மிகப் பெரிய உதவி.

அரித்ராவுக்கு இரண்டரை வயதான போது நளினியை சேலம் சிறைக்கு மாற்றினார்கள். அங்கே, பசு மாட்டை ஆச்சரியமாகப் பார்த்த அரித்ராவின் எதிர்காலம் குறித்து நளினிக்கு அச்சம் கொண்டதினால், இந்த வழக்கில் சக சிறைவாசியாக இருந்த சுசீந்திரனின் தாயார் அரித்ராவை கோவையில் வைத்து வளர்த்தார். சில ஆண்டுகள் கழித்து இலங்கை சென்ற அரித்ரா, பிறகு லண்டன் சென்றாள். தற்போது அவளுக்கு வயது 22.

தனி தனி சிறைகளில் ஒரு காதல் ஜோடியின் திணிக்கப்பட்ட பிரிவு தங்க முடியாத வேதனையை இருவருக்கும் கொடுத்திருக்கும். இவர்கள் வாழ்வின் எந்தச் சந்தோஷங்களையும் காணாத போதும் இறுதி காலத்தை தனது மகளுடன் லண்டனில் வசிக்க ஆசை கொண்டுள்ளனர் இருவரும்.

திருமணமாகி முழுமையாக ஒரு மாதம் கூட  இவர்கள் இருவரும் சேர்ந்து வாழவில்லை. இனிவரும் காலம் இருவருக்கு இனிமையாக அமைய இறைவனை பிரார்த்தித்துக்கொள்கிறேன்.  

Wednesday, November 20, 2013

பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள் - தமிழ் கதை புத்தகங்கள் - PDF


நண்பர்களின் வேண்டுகோளுக்காக தமிழ் நாவல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

 

FOR MORE INFO : Call : Kisho : +94 77 8647 085

 

Ramanichandran Novels

Entrenrum Unnoduthan| Kandanalmudalaay| Poongatru| Oru Chinna asai| Parkum Vizhi Nan Unnakku| Jodi purakkal| Idaiveli Athigamillai| Veedhiyellam gal| Veesukintra Katrle Vilaikindra Sugame|

Sujatha Novels

Kaalgal| Jannal| Enge En vijai| Curfew| Arangetram| Amma mandapam| Nagaram| Filmutsav| Aah| Anamika| Vedantham| Nayagara|

Rajesh Kumar Novels

வண்ண வண்ண துரோகங்கள்| ஒன்பதாவது திசை| ஹாங்காங் விழிகள்| இனி+மின்மினி| Avall Oru Aachcharyakkuri| Kolaikaara Computer| Ini Illai Indhu| நைலான் கனவுகள்| இருட்டில் வைத்த குறி| கொலுசு சத்தம் த்ரில்நாவல்| காவ்யாவின் கறுப்பு தினங்கள்| கிலி,கிளி,கிழி| விலகு விபரீதம்| இதுதான் சொர்க்கம்| வெல்வெட் கில்லர்| சிவப்பாய் சில கனவுகள்| தப்புத் தப்பாய் ஒரு தப்பு|

Sandilyan Novels

Madhaviyin manam| Niila rathi| Indirakumari| Udhaya Banu| Kadal Vendhan| Neel Vizhi| Nilamangai| Jeeva Boomi| Ilaya Rani| kalvanin kathali|


Sivasankari Novels

Kaalaan| Vetkam Kettavargal| Sura Meengal| Ini| Palangal| Malayin Aduththa Pakkam| Mella Mella| naan naanaaga| verilladha marangal| Thavam| kaathirukiren| Chinna Noolkanda Nammai Siraipaduthuvathu| ivargalum avargalum| poga.. poga| 47 naatkall| vaerillaadha marangall| Katrulla Pothe|

Anuradha Ramanan Novels

Neeyum Naanum Ninaiththaal| Yaedho Ariyaen Yenadhaaruyirae| Kodi Pookkall| oomai manidhargall| Kanna Unnai Marapena| Kaanaamal Pona Kanavugal| Koottukkullae Sila Kaalam| Unnai Pol Oruththi| Uravai Thaedum Paravai| Antharaththil or Oonjal|

Balakumaran Novels

thaayumaanavan| irandaavadhu kalyaanam| Anbulla Maan Vizhiyae| Poosu Manjall, Ammaavin Tharkolai| kadalorakkuruvigall| dhaasi| dhana raegai| aanandha vayal| kaadhal-vari| Kadavul Veedu| Nalla Mun Panikkaalam|

Devi Bala Novels

madisaar maami| maavilai thoranam| Thalattuthe Vanam| Madhil Mael Manaivi| maappillai maariyaachchu| Vaigarai Kolangall| Kai Saerum Naeram| nenjae unnidam| Kadhavu Thirandhadhu| Kudai Raattinam| manjam konda nenjam| Alaithal Varuven| Veliyae Sonnaal Vetkam-Devibala| Mugam Paarkkum Nilavu| Oru Gulmohaar Maraththin Keezhae| Pattu Maami|

Lakshmi Novels

Oru kaaviriyai pola| Adutha Veedu| Kashmir Katthi| Mithila Vilas| Nathimulam| Nirka Neram Illai| Urimai Urangukirathu|

Indhumathi Novels

yarr| நினைவே இல்லையா நித்யா ?| Yaen Eppadi, Avalukku Amudhendru Paer| Veenaiyil Urangum Raahangal| Githamadi Nee Enakku| Tharaiyil Irangum Vimanangal| Thottu Vidum Thooramthan| Kann Simittum Minminigal| Yendru Puthithai Pirappom| En Eppadi| Parappatharku Mun Konjam| Malargalilae Aval Malligai| Thottuvidum Thuuram| Nizhalgal Sudhuvathilai| Odum Megangale| Ninaivae Illaiyaa Nithya| Manal Veedugal| En Veetu Roja Un Veetu Jannalil| Oru Nimidam Tha| Viralkalai Meetum Veenai| Ashoka Vanam| Viralodu Veenai|

Pattukkottai Prabhakar Novels

irandaam kaadhal yudhdham|
en dhaevadhai engae|
Badhil Thaa Bharath|
Meendum Aarambikkalaam|
Pandhaya Novel] and Aagaiyaal Irandhaall|
Thalaiyanai Yudhdham|
Punnagai Sei Thozhi|
Uyir Varai Iniththavall|
Puthirpootha Nanthavanam Iravu Pathu|




Saturday, September 28, 2013

வறுமையில் வாடும் நாடு சோமாலியா : எலும்பும் தோலுமான மக்கள்


வறுமைக்கும், பயங்கரவாதத்துக்கும் இடையே தவிக்கும் சோமாலியாவை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

இங்கு மரங்கள் எதிலும் பச்சை இலைகளைப் பார்க்க முடியாத நிலை உள்ளது. தெருவோரங்களிலும் பாலைவன மணலிலும் எழுந்திருக்கக்கூடத் திராணியற்று ஊர்ந்தபடி செல்கின்றனர் குழந்தைகள்.

எல்லாக் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு தொலை தூரத்தில் உள்ள முகாம்களுக்கு நடக்க முடியாது என்பதால் சில குழந்தைகளைப் பெற்றோர்களை சாகவிட்டுவிடுகிறார்கள்.

ஒரு குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு, இறந்துபோன இன்னொரு குழந்தையைக் குழியில் போட்டுப் புதைக்கும் நிலை இங்குள்ள தாய்மார்களுக்கு அடிக்கடி ஏற்படுகிறது.

சோமாலியாவில் நரகம் போன்ற அதிர்ச்சியான நிலை உள்ளது. இந்த நாடு ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கிறது. பசியும் பஞ்சத்தினால் உடல் சிறுத்து, தலை வீங்கிப்போன மனிதர்களும் உள்ளனர். கூடவே இங்கு மத அடிப்படைவாதமும் நிலவுகிறது.

நாட்டின் தெற்குப்பகுதிகள் பெரும்பாலும் ஆயுதக் குழுக்களின் பிடியில் இருக்கின்றன. இவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஷரியத் சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. திருடினால் கையை வெட்டுவார்கள். கலப்படம் செய்தால் கல்லால் அடிப்பார்கள். போதைப் பொருள் கடத்தினால் தூக்கிலிடுவார்கள். உணவுக்கே வழியில்லாத மக்களின் நிலைமை, இவைபோன்ற கடுமையான சட்டங்களாலும் சண்டைகளாலும் மேலும் மோசமடைந்திருக்கிறது.

நாட்டில் மழையில்லை, இயற்கை வளங்கள் இல்லை என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், முறையான அரசு நிர்வாகம் இல்லை என்பதுதான் இங்குள்ள பஞ்சத்துக்கு அடிப்படைக் காரணம்.

சோமாலியாவில் அரசை அமைப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும், ஐ.நா. அமைப்பும் பல முறை முயன்று தோற்றுப் போயிருக்கின்றன. கடந்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு அதிபரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால், இன்னும் அரசற்ற நாடாகவே சோமாலியா இருந்து வருகிறது. 


புதிய தலைமுறை இணையத்தில் இருந்து பெறப்பட்டது  



Monday, July 29, 2013

வட மாகாண சபையும் - தேர்தலும்


வட மாகாண தமிழ் மக்களின் இன்னும் அக்கறையில்லாத/ நாட்டமில்லாத/ பயனில்லாத வட மாகாண சபை தேர்தல் எதிர்வரும் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதில் வட மாகாண தேர்தலில் பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ள இரு பிரதான அரசியல் கட்சிகளின் பிரசாரங்களின் போது பகிரப்படவுள்ள சாதனைகள், தேவைகள், குற்றசாட்டுகள் - கருத்து என் பார்வையில்:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசாரம் :

இணைந்த வட கிழக்கு தாயகம்
இழந்த உரிமை, இழந்த காணி, இழந்த சுதந்திரம், அடக்கு முறை, அரசியல் கைதி விடுதலை, இராணுவ முகாம், காணி அபகரிப்புகள், சிங்கள குடியேற்றங்கள் ஆகியவற்றை முன்னிறுத்தி ஈழ விடுதலை போராளிகளின் தியாகத்தினை  விற்பனை செய்ய மும்முரம் காட்ட போகும் தமிழ் தேசிய கூட்டமைப்பு.

ஒரு செல் சத்தம், ஒரு கிளைமோர் சத்தம், ஒரு கொத்தணி குண்டின் உக்கிரம் அறியாத ஒருவர் முதலமைச்சர் வேட்பாளர்.

ஆக மொத்தத்தில் 13ம் திருத்ததுக்காக 100,000க்கு மேற்பட்ட உயிர் தியாகங்களை விற்க்கப்போகும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசாரம்.


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசாரம் :

ஒரே நாடு ஒரே மக்கள்
அபிவிருத்தியும் நகரமாயமாக்களும், சுதந்திரம், போராளிகளின் புனர்வாழ்வு மற்றும் விடுதலை, தொழில் வாய்ப்புக்கள், பாதுகாப்பான வாழ்வு, குட்டி சிங்கபூர்,

முதலமைச்சர் வேட்பாளராக வருபவர் ஒற்றை சொல்லில் சொன்னால் " துரோகியாக " இல்லாமல் இருந்தால் ஓரளவுக்குக்கு போட்டி போடக்கூடிய நிலை இருக்கும்.

"மூளை சலவையில் யாரு வெற்றி பெறுவார்கள் என்பது எதிர்வரும் காலங்களில் தெரியும் "

இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவது உறுதி. ஆனால் இனிமேல் இணைந்த வடகிழக்கு என்ற சொல்லுக்கு அரசு முற்று புள்ளி வைத்துள்ளது. இதுவே அரசுக்கு கிடைத்த வெற்றியே !!

பதின்மூன்றை வைத்து சோறு கூட சமைக்க முடியாது, இதற்க்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு விருந்து கொடுக்க போவதாக கூறுவது...................... (சொல்லவதுக்கு ஒன்றுமில்லை)

முடிவு மக்கள் கையில் !!

படத்தினை பெரிது படுத்த படத்தின் மீது கிளிக் செய்யவும் 




Tuesday, June 18, 2013

கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள் - தரவிறக்கி கொள்ளுங்கள்

மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம்.

~~Browser~~

ப்ரௌசர் என்பது இல்லாமல் நீங்கள் இப்போது இந்த பதிவை படிக்க முடியாது. இணையத்தில் நாம் செயல்பட ப்ரௌசர் ஒரு கட்டாய தேவை. இதில் சிறந்த இரண்டு.

1. Chrome - http://goo.gl/j11of
2. Firefox - http://goo.gl/7ICv2


 
~~Antivirus~~

அடிக்கடி பென்டிரைவ் அல்லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது நம் கணினியில் வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. அம்மாதிரியான தருணங்களில் அவற்றை தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை. அவற்றில் சிறந்த இரண்டு.

1. Avast - http://goo.gl/8Br5g
2. Microsoft Security Essentials - http://goo.gl/YDpJ7


~~File Compression Software~~

File Compression Software என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. இதில் winzip மற்றும் winrar போன்றவை கட்டண மென்பொருட்கள். இதை செய்ய சிறந்த இலவச மென்பொருட்கள்.


1. 7-Zip - http://goo.gl/CHqRw
2. Zip2Fix - http://goo.gl/y1m9E


 
~~Image/Graphics editor, paint program, and picture organizer~~

இமேஜ் எடிட்டர் என்பது நமக்கு அடிக்கடி தேவைப்படும் ஒன்று. இதில் பெரும்பாலான மென்பொருட்கள் நமக்கு இலவசமாக கிடைப்பது இல்லை. ஆனால் சில நமக்கு இலவசமாக பல வசதிகளை தருகின்றன. அவற்றில் சிறந்தவை.

1. Gimpshop - http://goo.gl/UK9s
2. Paint.NET - http://goo.gl/59FB
3. IrfanView - http://goo.gl/59FB
4. Inkscape - http://goo.gl/q6Sh

 
~~Multimedia~~

கணினியில் ஓய்வு நேரங்களில் நாம் செய்வது பாடல்கள் கேட்பது மற்றும் படங்கள் பார்ப்பது. அத்தோடு Video Editor, Video Converter போன்றவை தொழில்ரீதியாக உள்ள Multimedia Tools. இதில் சிறந்த இலவச மென்பொருட்கள்.

1. VLC media player - http://goo.gl/oRNqK
2. KM Player - http://goo.gl/VMzX7
3. Audacity – Free Audio Editor - http://goo.gl/ARs0
4. Avidemux – Free Video Editor - http://goo.gl/Uzr2n
5. DVD Video Soft - http://goo.gl/w6Hhj
6. Free Make Video Converter - http://goo.gl/Hyb9J


 
~~~Office Tools~~

MS Office க்கு மாற்றாக பல இலவச மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் சிறந்தவை.

1. MS Officeக்கு மாற்றாக சில இலவச மென்பொருட்கள் - http://goo.gl/XuiAM

Wednesday, May 29, 2013

IPL அணிகளின் உரிமையாளர்கள் பற்றிய தகவல்கள்





சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என, சொல்லப்பட்டு வந்த குருநாத் மெய்யப்பன் சூதாட்டக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படும் நிலை உருவானபோது, அவர் அணியின் உரிமையாளர் அல்ல என்றும், வெறும் கௌரவ உறுப்பினர் மட்டுமே என இந்தியா சிமென்ட்ஸ் விளக்கம் அளித்தது. அதைத் தொடர்ந்து, இவ்விவகாரத்தில் நடந்து வரும் விசாரணையில், மற்ற சில அணி வீரர்களுக்கும் தொடர்பு இருக்கும் என தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், மற்ற அணிகளின் உரிமையாளர்கள் யார் என்ற கேள்வியும் எழுகிறது.


கிங்ஸ் லெவன் பஞ்சாப்
ஐபிஎல் அணிகளில், அதிகமான எண்ணிக்கை பங்குதாரர்களைக் கொண்ட அணி என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. ட்ரீம் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம்தான் இதன் அதிகாரப் பூர்வ உரிமையாளர். இந்த அணிக்கு 7 பங்குதாரர் இதில் உள்ளனர். இதில் நன்கு அறியப்பட்ட பங்குதாரர், பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. அடுத்து, பாம்பே டையிங் குழுமத்தைச் சேர்ந்த நெஸ் வாடியா மற்றும் கால்வே இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனம். இந்த 3 தரப்புக்கும் தலா 22.98 சதவீத பங்குகள் உள்ளன.
அடுத்து, எம்பி ஃபின்மார்ட் என்ற நிறுவனத்துக்கும், விண்டி இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்துக்கும் தலா 11.49 சதவீத பங்குகள் தரப்பட்டுள்ளன. ரூட் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனம், 4.09 சதவீத பங்குகளும், ஹோட்டல் துறையில் செயல்பட்டு வரும் ஏபிஜி சுரேந்திரா குழுமத் தலைவரான கரன் பால் 3.99 சதவீத பங்குகளும் பெற்றுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இந்த அணியின் உரிமையாளர், நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம். முன்னணி பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தனது ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் இதில் 54.77 சதவீத பங்குகளை பெற்றுள்ளார்.
அதே போல, பிரபல நடிகையான ஜூஹி சாவ்லா 20.10 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதுதவிர, மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த தி ஸீ ஐலேண்ட் இன்வெஸ்மெண்ட் என்ற நிறுவனத்தின் ஜே மேத்தா என்பவருக்கு 25.12 சதவீத பங்குகள் உள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ்
ஜெய்ப்பூர் ஐபிஎல் கிரிக்கெட் என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும், மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த இ.எம். ஸ்போர்டிங் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனம் வைத்துள்ளது. அதில் நான்கு பேர் பங்குதாரர்கள். இதில் சுரேஷ் செல்லாராம் 44.1 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இவர், முன்னாள் ஐபிஎல் கமிஷனரான லலித் மோடியின் உறவினர் எனவும் சொல்லப்படுகிறது.
அடுத்து எமர்ஜிங் மீடியா என்ற நிறுவனப் பெயரில், 32.4 சதவீத பங்குகளை மனோஜ் பாதல் என்ற நபர் வைத்துள்ளார். பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, குக்கி இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனம் மூலமாக 11.75 சதவீத பங்குகளை பெற்றுள்ளார். அதேபோல், ப்ளு வாட்டர் எஸ்டேட் என்ற நிறுவனம் மூலமாக, சர்வதேச மீடியா உலகில் அறியப்பட்ட லாச்லன் மூர்டெக் 11.75 சதவீத பங்குகளைப் பெற்றுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ்
இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமம். எனினும், இந்த குழுமத்தின் 3 நிறுவனங்களின் பெயரில் இந்த பங்குகள் உள்ளதாக தெரிகிறது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்துக்கு 49.99 சதவீதமும், ஷினானோ இன்டஸ்ட்ரியல் ரிடெய்ல் என்ற நிறுவனத்துக்கும், டீஸ்டா ரிடெய்ல் என்ற நிறுவனத்துக்கும் தலா 20 சதவீதமும் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மீதியுள்ள 10 சதவீத பங்குகள் இக்குழுமத்தைச் சேர்ந்த அன்ஷூ ஜெயின் என்பவரது பெயரில் உள்ளது என்கின்றன தகவல்கள்.

ஹைதராபாத் சன் ரெய்சர்ஸ்
ஹைதராபாத் சன் ரெய்சர்ஸ் அணியின் உரிமையாளர், சன் டிவி நெட்வொர்க். இதன் மொத்த பங்குகளும் இந்த குழுமத்திடமே உள்ளன.

ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களுரு
அணியின் உரிமையாளர் யூபி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட். இதன் பங்குகள் அனைத்தும், விஜய் மல்லையா தலைமையிலான யூ பி குழுத்திடம் உள்ளன.

டெல்லி டேர்டெவில்ஸ்
இந்த அணியின் உரிமையாளர், ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ். டெல்லி விமான நிலையத்தை கட்டி நிர்வகிக்கும் ஜிஎம் ஆர் குழுமத்திடம் இதன் மொத்த பங்குகளும் உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்த அணியின் உரிமையாளர் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம். இதன் பங்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்திட்மே உள்ளது.

பூனே வாரியர்ஸ் அணி
அடுத்த ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ள, பூனே வாரியர்ஸ் அணி. இதன் உரிமையாளர், சஹாரா அட்வென்ச்சர் ஸ்போர்டஸ் என்ற நிறுவனம். இதன் பங்குகள் அனைத்தும் சஹாரா இந்தியா குழுத்திட்ம் உள்ளன.